பயனுள்ள பல தகவல்கள் உங்களுக்காக !!!

நீ வெற்றிக்காக போராடும்போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள்...
நீ வெற்றி பெற்றபின்
விடா முயற்சி என்பார்கள்...
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்...
செய்ய முடியாதவன் போதிக்கிறான்...
விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்...
தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்...
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்...

அற்புதமான வரிகள் சில!

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம். 

துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். 

உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது. 

ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது.அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில்முட்டாளாக்கி விடுகிறாள். 

பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள்.ஒன்று அழகானவர்கள்மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். 

அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது(யாருங்க அது 

பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!! 

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம் ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 

நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். 

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும் 

சுயநலம் என்பது சிறு உலகம் அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான் 

வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல். 

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. 

மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே! 

அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே! 

செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை! 

நாக்கு கொடிய மிருகம் அதை எப்போதும் கட்டியே வை! 

பறக்க விரும்புபவனால் படர முடியாது. 

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை. 

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

No comments:

Post a Comment