பயனுள்ள பல தகவல்கள் உங்களுக்காக !!!

நீ வெற்றிக்காக போராடும்போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள்...
நீ வெற்றி பெற்றபின்
விடா முயற்சி என்பார்கள்...
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்...
செய்ய முடியாதவன் போதிக்கிறான்...
விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்...
தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்...
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்...

ஐன்ஸ்டினின் பொன்மொழிகள்!

வெளி உலகில் ஒருவன் எவ்வளவு அற்புத மனிதனாக விளங்கினாலும், அவனுடைய மனைவியும்வேலைக்காரனும் அப்படி அதிசயிக்கும் படியான எதையும் அவனிடம் காண்பதில்லை.

******

நாம் வீழ்ச்சி  அடைந்து விட்டால் நம் மீதே பழி சுமத்தப் பல நண்பர்கள் வருவார்கள். நாம் உயர்வு அடைந்து விட்டாலோ, தங்களுடைய உதவியால் தான் என்று பறை அடிப்பார்கள்.

******

எக்காரியத்தையும் முகஸ்துதி சாதிக்கும். கெட்டவர்களுக்கு அது கிரீடம். நல்லவருக்கு அது நஞ்சு.

******

வயிற்றெரிச்சல் தனது வன்ம விஷத்தையே உறிஞ்சிக் குடித்துத் தனக்குத் தானே நஞ்சிட்டு நாசப் படுத்திக் கொள்ளும்.

******

வழக்கம் என்பது வன்மையான, வஞ்சகமான ஒரு வாத்தியார். அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அதிகாரத்தின் காலடியை நம் மீது ஊன்றி விடுவார்.

******

நிகழ் காலத்தில் வாழத் தெரியாமல் வருங்காலத்திய துக்கம், பயன், நம்பிக்கை என்னும் கயிறுகளில் ஊசலாடுவது மனித குலத்தின் இயல்பு.

******

தனது ஞாபக சக்தியில் நம்பிக்கை இல்லாதவன், பொய் சொல்ல முயற்சி   செய்யக் கூடாது. 

******

பேராசைக்குக் கூட  நிறைய சொத்து உண்டு. ஆனால் பொறாமைக்கோ, வேதனை விரக்தியைத் தவிர வேறு எந்த லாபமும் இல்லை.

******

புகழை நோக்கி ஓடாதீர்கள்; புகழை நீக்கியும் ஓடாதீர்கள்.

******

என்னிடம் உள்ள மிக சிறந்த நற்பண்பில் கூட ஏதோ கொஞ்சம் பாவத்தின் சாயம் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன்.

******

சிறு துன்பங்கள் வாய் திறந்து பேசும். பெருந்துன்பங்கள் ஊமையாக்கும்.

******

தேவை என்பது ஒரு மூர்க்கமான வாத்தியாரம்மா.

******

தலைக் கனம் என்பது இரண்டு வகை. தன்னைப்  பெரிதாக நினைப்பது. முதல் வகை. தலைக்கனமுள்ள பிறரைத் தாழ்வாக நினைப்பது இரண்டாம் வகை.

******

செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல. நிர்வாகத்தைப் பொறுத்தது.

******

சட்டங்கள் இல்லாவிடில் நாம் ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவோம்.

******

சுகபோகத்தில் வளர்பவர்கள் எப்போதும் ஆணவம், கர்வம், பொய் வேஷம் இவற்றில் திறமை பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.

******

படைக்கலங்களின் முழக்கம், சட்டத்தின் குரலை மூழ்கடித்து விடுகிறது.

******

ஆசையும், இன்பம் துய்த்தலுமே நம்மை ஆத்திரக்காரர்களாக உருமாற்றுகின்றன.

******

மூடனுக்குக் கல்வியறிவின் மீது கோபம்; குடிகாரனுக்கு யோக்கியன் மீது ஆத்திரம்; ஒழுக்க சீலனுக்கு அயோக்கியத்தனம் செய்யச் சொல்வதே தண்டனை. தேகப் பயிற்சியே சோம்பேறிக்குத் தண்டனை.

******

மக்கள் தங்கள் ஆசைகளுக்கும், விசமத்திற்கும் வன்செயலுக்கும் உற்சாகம் என்னும்  பெயரை சூட்டுகிறார்கள்.

******

நமது மூளையை மற்றவர்களின் மூளையோடு தேத்தப் பள பளப்ப்பாக்கிக் கொள்வது நல்லது.

******

நல்ல சுபாவமும், நேர்மைப் பயிற்சியும் இல்லாதவனுக்கு மற்ற அறிவனைத்தும் தொந்தரவுதான்.

******

பெண்ணொருத்தி தன் அழகை  அதிகப்படுத்திக் கொள்வதற்காக எந்த வித சித்திரவதையையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பாள்.

******

ஒரே மாதிரியான இரு தலைமுடியோ, இரு தானியங்களோ,இரு கருத்துக்களோ, இந்த உலகில் இருந்ததில்லை. வேறுபாடு தான் இந்த உலகின் பொதுவான பண்பு.

******

மனிதனின் முயற்சியை விட சூழ்நிலைகள் சில நேரங்களில் வெற்றி பெறுவதுண்டு.

******

தடைகளை நீக்க வன்முறை நிரந்தரமாக்கப் படும்போது பேரழிவே எஞ்சியிருக்கும்.

******

தலைமையினைக் கேள்வி கேட்க முடியாத செயல்பாடுகள் உண்மைக்குப் புறம்பானவைகளாகவே இருக்கும்.

******

ஒரு பொருளைப் பார்ப்பதால் மட்டும் முக்கியத்துவம் ஏற்படாது. எப்படிப் பார்க்கிறோம் என்பதனால் தான் ஏற்படும்.

******


No comments:

Post a Comment