பயனுள்ள பல தகவல்கள் உங்களுக்காக !!!

நீ வெற்றிக்காக போராடும்போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள்...
நீ வெற்றி பெற்றபின்
விடா முயற்சி என்பார்கள்...
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்...
செய்ய முடியாதவன் போதிக்கிறான்...
விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்...
தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்...
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்...

தன்னம்பிக்கையை மேம்படுத்தும் பொன்மொழிகள் !

ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.

- காந்திஜி

நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.

- புத்த பகவான்

ஆழ்மனதின் சக்தியை அதிகப்படுத்துங்கள். அப்படி அதிகப்படுத்தியதால்தான் ஐசக் நியூட்டன், பெல், விவேகானந்தர், காந்திஜி போன்ற பல மனிதர்கள் உருவானார்கள். எனவே நல்லதைச் செய்துகாட்ட என்னால் முடியும் என்பதை ஆழ் மனதிற்குச் சொல்லிச் சொல்லி உங்கள் மன உறுதியைப் பலப்படுத்துங்கள்.

-ரான் ஹாலன்ட்

செயல்படும்போது அதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த நினைவில் உங்களுடைய சிந்தனையையும் செயலினையும் ஒருமுகப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம் உண்டு.

- எம்.ஆர். காப்மேயர்

தன்னம்பிக்கை, துணிவு, பயம் - இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான, உயர்வான வாழ்க்கையை அமைத்துத் தருகின்றன. தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும்.

தன்னம்பிக்கை இல்லையென்றால் அது பயத்தைத்தான் பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் ஈடபடமாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும்.

- நிசாமி

தனக்குத்தானே உதவிக்கொள்ளாமல் எவனாலும் அடுத்தவனுக்கு உதவ முடியாது என்பது உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று.

- எமர்சன்

உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. மற்றவரை அறிந்தவன் புத்திசாலி; தன்னைத்தான் அறிந்தவன் ஞானி.

-லா ஓட்ஸ்

எக்கணமும் சுறுசுறுப்பாக இருப்பவர்களிடம் திறமைகள் தாமே வந்து ஒட்டிக்கொள்ளும். தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்பவர்கள் மட்டுமே நிலையான புகழை ஈட்ட முடியும்.

-ஹெரால்டு

No comments:

Post a Comment